வேலை நாட்களிலும் ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டில் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.
வாராந்திர வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சன்னா மரின் கடந்த டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்நாட்டில் உள்ள பல கட்சி கூட்டணி ஆட்சியில் பிரதமராகியுள்ள இவர், தற்போது உலகின் மிக இளம் வயது பெண் தலைவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
இது பற்றி கூறும்போது, "மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். நேசிப்பவர்களாக நேரம் ஒதுக்குவது, பொழுதுபோக்கு, கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்." என சன்னா மரின் தெரிவித்துள்ளார்.