அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரானில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் முக்கிய நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஏழு பேரும் இந்தத் தாக்குதலில் பலியாகினர்.